தினம் ஒரு பாசுரம் - 62
தினம் ஒரு பாசுரம் - 62
உலவு திரையும் குலவரையும்* ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே
---திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி)
இப்பாசுரத்தில், நேபாளத்தில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் சாளக்கிராமம் திவ்விய தேசத்தை ஆழ்வார் பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறார். இங்கு கோயில் என்று தனியாக எதுவும் தனியாக இல்லை. முக்திநாத் என்ற திருத்தலமே கோயில் தான். கண்டகி நதிக்கரையில் (தாமோதர குண்டம் என்ற இடத்தில்) ஏராளமாகக் காணப்படும் சாளக்கிராம கற்கள் அனைத்திலும் திருமால் அந்தர்யாமியாக உறைந்திருப்பதாக வைணவ மரபு சொல்கிறது.
நாராயணனை சாளக்கிராமத் திருமேனியன் என்று அழைப்பது உண்டு. பெரியாழ்வாரும் தனது திருமொழிப்பாசுரத்தில் “சாளக்கிராமமுடைய நம்பி” என்று கண்ணனைப் போற்றுகிறார். முக்திநாத் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடவேண்டியது. வைணவர்கள் சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து பூஜை (இதற்கு திருவாராதனை என்று பெயர்) செய்யும் வழக்கமுண்டு. பல விஷ்ணு ஆலயங்களில் மூலவர் வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலை அணிந்தே காட்சியளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். படத்தில் சிவப்பாகக் குறித்திருக்கிறேன்.
இப்பாசுரத்தில், நேபாளத்தில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் சாளக்கிராமம் திவ்விய தேசத்தை ஆழ்வார் பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறார். இங்கு கோயில் என்று தனியாக எதுவும் தனியாக இல்லை. முக்திநாத் என்ற திருத்தலமே கோயில் தான். கண்டகி நதிக்கரையில் (தாமோதர குண்டம் என்ற இடத்தில்) ஏராளமாகக் காணப்படும் சாளக்கிராம கற்கள் அனைத்திலும் திருமால் அந்தர்யாமியாக உறைந்திருப்பதாக வைணவ மரபு சொல்கிறது.
நாராயணனை சாளக்கிராமத் திருமேனியன் என்று அழைப்பது உண்டு. பெரியாழ்வாரும் தனது திருமொழிப்பாசுரத்தில் “சாளக்கிராமமுடைய நம்பி” என்று கண்ணனைப் போற்றுகிறார். முக்திநாத் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடவேண்டியது. வைணவர்கள் சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து பூஜை (இதற்கு திருவாராதனை என்று பெயர்) செய்யும் வழக்கமுண்டு. பல விஷ்ணு ஆலயங்களில் மூலவர் வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலை அணிந்தே காட்சியளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். படத்தில் சிவப்பாகக் குறித்திருக்கிறேன்.
பல
ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய
சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at:
http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல
ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய
சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at:
http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல
ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய
சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at:
http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல
ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய
சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at:
http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !
உலவு திரையும் குலவரையும்* - உலாவுகின்ற கடல் அலைகளிலும், பெருமலைகளிலும்
ஊழி முதலா எண் திக்கும்* - காலம் மற்றும் எட்டு திசைகளிலும்
நிலவும் சுடரும் - நிலவிலும், கதிரவனிலும்
இருளுமாய் நின்றான்* - இருளிலும் (இவ்வாறாக அனைத்திலும் அந்தர்யாமியாக உறைந்து) நிற்பவனும்,
வென்றி விறல் - வெற்றியும், பெருமையும் மிக்க
ஆழி வலவன்* - திருச்சக்கரத்தை தன் வலக்கையில் ஏந்தியவனும்
வானோர் தம் பெருமான்* - இமையவர்க்குத் தலைவனும்
மருவா அரக்கர்க்கு - பகைமை (பாராட்டும்) அரக்கர்க்கு
எஞ்ஞான்றும் சலவன்* - எல்லாக்காலங்களிலும் தீமைகள் செய்பவனும்
சலம் சூழ்ந்து அழகாய* - நீர் சூழ்ந்து எழில் நிறைந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே - சாளக்கிராமம் அடைந்து (அப்பெருமானைப்) பற்றி வணங்கு என் நெஞ்சமே!
ஆழ்வார், பரமனே சகலமும் என்பதை இருவிதமாக, எளிமையாக விளக்குகிறார். முதலில் அவன் அந்தர்யாமியாக அனைத்திலும் உறைந்திருப்பதை, அதாவது திருமாலின் அண்டம் வியாபித்த (ALL PERVADING) தன்மையைப் பாடுகிறார். இரண்டாவதாக, அவன் உருவ,வடிவ குணநலன்கள் (கல்யாண குணங்கள்) சிலவற்றைப் போற்றுகிறார். அருவ, உருவ என்று திருமாலின் இருவகைத் தன்மைகளையும் சொல்கிறார்.
”அப்படிப்பட்டவன் சாளக்கிராமத்தில் எழுந்தருளியுள்ளான், உடனே சென்று அவன் திருவடியைப் பற்றித் தொழுதேத்துக” என்று அடியவரான நமக்கு வழி காட்டுகிறார். மிக எளிமையான, அந்தர்யாமித்துவத்தை பறைசாற்றும் அற்புதமானதொரு பாசுரம்! ஆழ்வார் மறவர் குலத்தில் அவதரித்த மாவீரர் என்பதாலோ என்னவோ, சங்கை விட திருச்சக்கரத்தை அதிகம் பாடியிருக்கிறார் :-)
அன்புடன்
பாலா
ஊழி முதலா எண் திக்கும்* - காலம் மற்றும் எட்டு திசைகளிலும்
நிலவும் சுடரும் - நிலவிலும், கதிரவனிலும்
இருளுமாய் நின்றான்* - இருளிலும் (இவ்வாறாக அனைத்திலும் அந்தர்யாமியாக உறைந்து) நிற்பவனும்,
வென்றி விறல் - வெற்றியும், பெருமையும் மிக்க
ஆழி வலவன்* - திருச்சக்கரத்தை தன் வலக்கையில் ஏந்தியவனும்
வானோர் தம் பெருமான்* - இமையவர்க்குத் தலைவனும்
மருவா அரக்கர்க்கு - பகைமை (பாராட்டும்) அரக்கர்க்கு
எஞ்ஞான்றும் சலவன்* - எல்லாக்காலங்களிலும் தீமைகள் செய்பவனும்
சலம் சூழ்ந்து அழகாய* - நீர் சூழ்ந்து எழில் நிறைந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே - சாளக்கிராமம் அடைந்து (அப்பெருமானைப்) பற்றி வணங்கு என் நெஞ்சமே!
ஆழ்வார், பரமனே சகலமும் என்பதை இருவிதமாக, எளிமையாக விளக்குகிறார். முதலில் அவன் அந்தர்யாமியாக அனைத்திலும் உறைந்திருப்பதை, அதாவது திருமாலின் அண்டம் வியாபித்த (ALL PERVADING) தன்மையைப் பாடுகிறார். இரண்டாவதாக, அவன் உருவ,வடிவ குணநலன்கள் (கல்யாண குணங்கள்) சிலவற்றைப் போற்றுகிறார். அருவ, உருவ என்று திருமாலின் இருவகைத் தன்மைகளையும் சொல்கிறார்.
”அப்படிப்பட்டவன் சாளக்கிராமத்தில் எழுந்தருளியுள்ளான், உடனே சென்று அவன் திருவடியைப் பற்றித் தொழுதேத்துக” என்று அடியவரான நமக்கு வழி காட்டுகிறார். மிக எளிமையான, அந்தர்யாமித்துவத்தை பறைசாற்றும் அற்புதமானதொரு பாசுரம்! ஆழ்வார் மறவர் குலத்தில் அவதரித்த மாவீரர் என்பதாலோ என்னவோ, சங்கை விட திருச்சக்கரத்தை அதிகம் பாடியிருக்கிறார் :-)
அன்புடன்
பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment